×

முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்டத்தில் இன்று தபால் வாக்கு பதிவு

மதுரை, ஏப். 5: மதுரை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் இன்று (ஏப். 5) தபால் வாக்கு பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தரப்பில் பிரசாரம் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் குழுக்கள் அமைத்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் நேற்று முதல் தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் இன்று (ஏப். 5) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முதியோர் மற்றும் மற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் வாக்குகளை பெற உள்ளனர். இப்பணிகளில் துணை தாசில்தார் மற்றும் போலீசார் குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

The post முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்டத்தில் இன்று தபால் வாக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி பதில் தர ஆணை!!